tamilnadu

img

சிபிஐ விசாரணைக்கு அவகாசம் கேட்கிறார் - ராஜீவ் குமார்

கொல்கத்தா:
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் 7 நாட்கள் அவ காசம் கேட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடியில் முக்கிய ஆவணங் களை அழித்து விட்டதாக காவல்துறை அதிகாரி ராஜீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ முன் கடந்த ஞாயிறன்று ஆஜராக வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமானநிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிபிஐக்கு பதில் அனுப்பியுள்ள ராஜீவ், தான் விடுமுறையில் இருப்பதாலும், தேர்தல் நடத்தை  விதிமுறைகள் தற்போதுதான் முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தான் நேரில் பதிலளிப்பதற்கு ஒருவார காலம் அவகாசம் தேவை என்றும் அந்த பதில் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.